கொள்ளிடம், டிச.5: கொள்ளிடம் அருகே சின்னகொப்பியம் கிராமத்தில் மழையின் காரணமாக 40 ஏக்கர் சம்பா நெற்பயிர் தண்ணீரில் மூழ்கியது. வாய்க்கால் தூர்வாராததால் தண்ணீர் வடிவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. நாகை மாவட்டம் கொள்ளிடம் அருகே சின்னகொப்பியம் கிராமத்தில் கடந்த சில தினங்களாக தொடர்ந்து பெய்த மழையின் காரணமாக 40 ஏக்கர் சம்பா நெற்பயிர் தண்ணீரில் மூழ்கியது.மழை பெய்வது தற்பொழுது குறைந்து கா ணப்பட்டாலும் வயலில் தேங்கிய மழை நீர் எளிதில் வடியவில்லை. பன்னங்குடி, அழகாபுரம், திருஞானசம்பந்தம், ஆலாலசுந்தரம், கண்ணபிராண்டி, சின்னகொப்பியம் ஆகிய கிரமங்களில் உள்ள ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஏக்கர் நிலங்களுக்கு பாசன மற்றும் வடிகாலாக இருந்து வரும் அரியலூர் வாய்க்கால் தூர்வாராமல் விடப்பட்டதால் வயலில் தண்ணீர் தேங்கி வாய்க்கால் மூலம் வடிய முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.