திருப்புவனம், அக்.17: திருப்புவனம் அருகே பழையனூரில் உள்ள அழகுநாச்சியம்மன் கோயிலில் முளைப்பாரி திருவிழா கடந்த 8ம் தேதி காப்புக் கட்டுதலுடன் தொடங்கியது. தினசரி அம்மனுக்கும், கிராம பரிவார தேவதைகளுக்கும் சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடைபெற்றது. நேற்று முன்தினம் முளைப்பாரியை வளர்த்த வீட்டிலிருந்து மந்தையம்மன் கோயிலுக்கு எடுத்துச் சென்றனர். முக்கிய விழாவான முளைப்பாரி ஊர்வலம், நேற்று மந்தையம்மன் கோயிலில் இருந்து புறப்பட்டது. அழகு நாச்சியம்மன் கோயில், கண்மாய் கரை திடல், பெரியநாச்சியம்மன் கோயில், ஊர்க்காவலன் கோயில், சந்தனக் கருப்பு கோயில், முருகன் கோயில், நவநீத பெருமாள் கோயில், மார்க்கண்டயேர் கோயில் உள்ளிட்ட கிராம தேவதைகளின் கோயில்களின் வழியாகவும், முக்கிய வீதிகள் வழியாகவும் வந்த முளைப்பாரி ஊர்வலம் பரிபூரண விநாயகர் கோயில் முன் இறக்கி வைக்கப்பட்டது.