தாய்ப்பால் வாரவிழா விழிப்புணர்வு பேரணி

சேத்தியாத்தோப்பு, ஆக. 14:சேத்தியாத்தோப்பு அருகே வளையமாதேவி கிராமத்தில், உலக தாய்ப்பால் வார விழா விழிப்புணர்வு பேரணிநடந்தது.

கடலூர் மாவட்ட திட்ட அலுவலர் பழனிவேல் விழிப்புணர்வு பேரணியை கொடியசைத்து துவக்கி வைத்தார். புவனகிரி வட்டார குழந்தை

கள் வளர்ப்பு திட்ட அலுவலர் தனபாக்கியம் வரவேற்றார். ஐடிஐ வளாகத்தில் இருந்து பேரணி புறப்பட்டு சிதம்பரம்-சேத்தியாத்தோப்பு சாலை மற்றும் முக்கிய தெருக்களின் வழியாக சென்று திரும்பியது.இந்நிகழ்ச்சியில் பலர் கலந்து கொண்டனர். பரங்கிப்பேட்டை வட்டார குழந்தைகள்வளர்ப்பு திட்ட அலுவலர் அனிதா செந்தில் நன்றி கூறினார்.

Related Stories: