இந்திய இறையாண்மைக்கு குந்தகம் விளைவிக்கும் கமலஹாசன் மீது கிரிமினல் வழக்குப்பதிய வேண்டும் போலீசில் இந்து முன்னணி புகார்

திருவண்ணாமலை, மே 16: இந்திய இறையாண்மைக்கு குந்தகம் விளைவிக்கும் வகையில் பேசி வரும் மக்கள் நீதிமய்ய தலைவர் நடிகர் கமலஹாசன் மீது கிரிமினல் வழக்குப்பதிய எடுக்க வேண்டும் என திருவண்ணாமலை போலீசில், இந்து முன்னணி சார்பில் புகார் மனு அளித்தனர். திருவண்ணாமலை டவுன் போலீசில் நேற்று, மாவட்ட இந்து முன்னணி தலைவர் வக்கீல் சங்கர் அளித்த புகார் மனுவில் கூறியிருப்பதாவது: மக்கள் நீதிமய்ய தலைவர் கமலஹாசன், சட்டப்பேரவை தேர்தல் பிரசாரத்தின்போது, பிற மதத்தினரை திருப்திபடுத்த, சுதந்திர இந்தியாவின் முதல் தீவிரவாதி இந்து என பேசி, இந்துக்களை கேவலப்படுத்தியதுடன், இந்தியாவில் பிரிவினையை ஏற்படுத்தி, சட்டம்- ஒழுங்கு பிரச்னையை தூண்ட முற்படுகிறார். இந்தியாவின் இறையாண்மைக்கு குந்தகம் விளைவிக்க எண்ணுகிறார். எனவே அவரின் தேர்தல் பரப்புரையை ஆராய்ந்து வழக்குப்பதிவு செய்து உரிய கிரிமினல் நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும், அவரது தேர்தல் பிரசாரத்துக்கு தடை விதிக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Related Stories: