செய்யாறில் தடைசெய்யப்பட்ட 100 கிலோ பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல்

செய்யாறு, மார்ச் 8: செய்யாறு நகராட்சி ஆணையாளர் சி.ஸ்டான்லிபாபு தலைமையில் நகராட்சி துப்புரவு அலுவலர் எஸ்.சுப்பிரமணியம், துப்புரவு ஆய்வாளர் கே.மதனராசன் ஆகியோர் மேற்பார்வையில் நேற்று காந்தி சாலையில் திடீர் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது, நடைபாதை வியாபாரிகள், சிறு வியாபாரிகள் பிளாஸ்டிக் பொருட்கள் பயன்படுத்துவது தெரியவந்தது. இதையடுத்து, அதிகாரிகள் அவர்களிடமிருந்து சுமார் 100 கிலோ பிளாஸ்டிக் பொருட்களை பறிமுதல் செய்தனர். மேலும், வியாபாரிகளுக்கு எச்சரிக்கை விடுத்து 7 கடைக்காரர்களிடமிருந்து ₹5 ஆயிரம் அபராதம் வசூலித்தனர்.

Related Stories: