ஆசிரியர் கூட்டணி கூட்டம்

சிவகங்கை, அக். 17:  சிவகங்கையில் தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி வட்டார கூட்டம் நடந்தது. இதில் நிர்வாகிகள் தேர்தல் நடத்தப்பட்டது. தேர்தல் பார்வையாளராக அன்பரசுபிரபாகர், சிவக்குமார் இருந்தனர். இதில் வட்டாரத்தலைவராக மைக்கேல்ராஜ், செயலாளராக இளையராஜா, பொருளாளாராக வடிவேல்ராணி மற்றும் துணை நிர்வாகிகள், மாவட்ட பொதுக்குழு, செயற்குழு உறுப்பினர்கள் தேர்வு செய்யப்பட்டனர். ஓய்வுப்பிரிவு நிர்வாகிகள் காசி, ஆறுமுகம் மற்றும் உறுப்பினர்கள் பலர் கலந்துகொண்டனர். கூட்டத்தில் அக்.27அன்று சிவகங்கையில் ஜாக்டோ சார்பில் நடைபெறும் ஆர்ப்பாட்டாத்தில் ஏராளமான ஆசிரியர்கள் கலந்துகொள்வது என்பது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

Related Stories: