பஸ் நின்று செல்லக்கோரி மனு

சிவகங்கை, அக்.17: இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் மாவட்ட செயலாளர் தென்னரசு, மாவட்ட பொருளாளர் ஜேம்ஸ்ராஜா மற்றும் நிர்வாகிகள் கலெக்டர் அலுவலகத்தில் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது: இளையான்குடியிலிருந்து சிவகங்கை நோக்கி செல்கிற சாலையில் லெயோனர்டு நகர் உள்ளது. இங்குள்ள ஸ்டாப்பில் பஸ்கள் நிற்பது கிடையாது. இதனால் இப்பகுதி மக்கள் இரண்டு கிமீ தூரம் சென்று திருவேங்கடத்தில் பஸ் ஏற வேண்டிய நிலை உள்ளது. இதனால் கடும் அவதி ஏற்படுகிறது. தொடர்ந்து வலியுறுத்தியும் இங்கு பஸ் நிற்க நடவடிக்கை இல்லை. எனவே இங்கு பஸ் நின்று செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு தெரிவித்துள்ளனர்.

Related Stories: