திருவண்ணாமலை, அக்.10: தனியார் உரம் விற்பனை மையங்களுக்கு விநியோகம் செய்ய தூத்துக்குடியிலிருந்து 1,264 டன் உரம் சரக்கு ரயில் மூலம் நேற்று திருவண்ணாமலை கொண்டுவரப்பட்டு சரக்கு லாரிகள் மூலம் அனுப்பி வைக்கப்பட்டது. திருவண்ணாமலை மாவட்டத்தில் சம்பா சாகுபடி செய்துள்ள விவசாயிகளுக்கும், பருவமழை தொடங்கி உள்ளதால் சம்பா நெல் பயிரிட உள்ள விவசாயிகளுக்கும் போதிய உரம், யூரியா தட்டுப்பாடு இன்றி கிடைக்க மாவட்டத்தில் உள்ள தனியார் உரம் விற்பனை மையங்களுக்கு விநியோகம் செய்ய தூத்துக்குடியிலிருந்து வேம்பு கலந்த யூரிய 604 டன், டிஏபி 660 டன் என ெமாத்தம் 1,264 டன் உரம் சரக்கு ரயில் மூலம் நேற்றுமுன்தினம் இரவு திருவண்ணாமலை ரயில் நிலையத்திற்கு கொண்டுவரப்பட்டது.