மணல் கடத்திய 3 பேர் கைது

புவனகிரி, செப். 11: புவனகிரியை அடுத்து மருதூர் போலீஸ் சரகத்திற்கு உட்பட்ட மஞ்சக்கொல்லை கிராமத்தில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த வழியாக வந்த மாட்டு வண்டிகளை நிறுத்தி சோதனை செய்தனர். அதில் உரிய அனுமதியின்றி வத்தராயன்தெத்து வெள்ளாற்றில் இருந்து மணல் திருடி வந்தது தெரிய வந்தது. இதையடுத்து 4 மாட்டு வண்டிகளை போலீசார் பறிமுதல் செய்தனர்.

மற்ற வண்டிகளை ஓட்டி வந்த மிராளூர் கிராமத்தை சேர்ந்த பிரகாஷ்(25), நாகராஜ்(50), சந்திரசேகர்(50)  ஆகிய 3 பேரை கைது செய்த போலீசார், அவர்கள் மீது வழக்கு பதிவு செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

மேலும் சோதனையின்போது மாட்டு வண்டியை விட்டுவிட்டு தப்பி ஓடிய மிராளூர் கிராமத்தை சேர்ந்த ரமேஷ், ராஜாமணி ஆகிய இருவரையும் தேடி வருகின்றனர்.

Related Stories: