புதுடெல்லி : கஜா புயல் பாதிப்புகள் குறித்து தமிழக முதல்வர் பழனிசாமியிடம், தொலைபேசியில் மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங் கேட்டறிந்தார்.
தமிழகத்திற்கு மத்திய அரசு சார்பில் அனைத்து உதவிகளும் செய்யபப்படும் என அவர் உறுதியளித்துள்ளார். மீட்பு மற்றும் நிவாரண பணிகளுக்கு தேவையான உதவிகள் செய்து தரப்படும் என்று ராஜ்நாத்சிங் கூறியுள்ளார்.