மத நல்லிணக்கத்தை வலியுறுத்தும் வகையில் நடைபெற்ற புதிய பள்ளிவாசல் திறப்பு நிகழ்ச்சி

இந்தியாவில் மத நல்லிணக்கத்தை வலியுறுத்துவதில் முன்னிலை வகிப்பது தமிழகம் என்றால் மிகையில்லை அதற்கு எடுத்துக்காட்டாக எண்ணற்ற மத நல்லிணக்க நிகழ்வுகள் நாள்தோறும் நடைபெற்ற வண்ணம் உள்ளது அதில் ஒன்றாக இந்நிகழ்வு நடைபெற்றுள்ளது.

திருநெல்வேலி மாவட்டம் கல்லிடைக்குறிச்சியில் பெரிய ஜும்மா பள்ளிவாசல் புதிய கட்டிட திறப்பு விழா நடைபெற்றது. இதில் இஸ்லாமியர்கள் மட்டுமில்லாமல்  மத நல்லிணக்கத்தை வலியுறுத்தும் வகையில் அனைத்து மதத்தினருக்கும் அழைப்பு விடுக்கப்பட்டு பங்கேற்று மத நல்லிணக்க கருத்துக்களை பகிர்ந்து கொண்டனர் .

இந்நிகழ்ச்சியில் பள்ளிவாசல் இமாம் முஹிப்புல்லா தலைமை வகித்தார். கட்டிட கமிட்டி செயலாளர்கள் முஹம்மது ஜாஹிர் ,மன்னார்,பொருளாளர் சேக் மைதீன், ஜமாத் தலைவர் அப்துல் மஜீத் உள்ளிட்டோர்  முன்னிலை வகித்தனர். முஸ்லிம் வெல்பேர் அசோசியேசன் தலைவர் முஹம்மது முஹைதீன் புதிய கட்டிடத்தை திறந்து வைத்தார். பேராசிரியர் சாஹுல் ஹமீது, தாசிம் பீவி கல்லூரி முதல்வர் சுமையா, ஐஎப்டி துணை தலைவர் டாக்டர் ஹபீப் முஹம்மது உள்ளிட்டோர் சிறப்பு விருந்தினராக பங்கேற்றனர்.

மத நல்லிணக்கத்தை வலியுறுத்தும் வகையில் புதிய பள்ளிவாசல் திறப்பு விழாவிற்கு K.S. சங்கர சுப்பிரமணியன் M.A , திலகர் வித்யாலயா மேல்நிலைப்பள்ளி அகஸ்தியர் கோவில் நிர்வாக தலைவர் சங்கர நாராயணன், நம்பி ராஜன்,ஆறுமுக பெருமாள் மற்றும் காந்திமதிநாதன் . மாவட்ட வக்கீல் சங்கம் உள்ளிட்ட பல்வேறு தரப்பினருக்கு சிறப்பு அழைப்பு விடுக்கப்பட்டு பங்கேற்றனர்.

புதிய பள்ளிவாசல் நிகழ்ச்சியில் மத பேதமின்றி ஒருவருக்கொருவர் தங்களிடத்தில் நிலவும் ஒற்றுமை மற்றும் அன்பு பறிமாற்றங்களை கருத்துகளாக பகிர்ந்து கொண்டது அனைவரையும் மகிழ செய்தது.

Related Stories: