வேட்டவலம், ஏப்.20: வேட்டவலத்தில் பிளஸ்2 மாணவன் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். வேட்டவலம் ஊராகாளி மேட்டுத் தெருவைச் சேர்ந்தவர் அர்ஜூனன்(38), கூலித்தொழிலாளி. இவரது மகன் விஜயராமன்(18), வேட்டவலம் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் பிளஸ் 2 படித்து வந்தார். இந்நிலையில், சில மாதங்களாக உடல்நிலை பாதிக்கப்பட்டு அதற்காக சிகிச்சை பெற்றுவந்தார். கடந்த 14ம் தேதி மாலை மீண்டும் உடல்நிலை பாதிக்கப்பட்டதால், மனமுடைந்த அவர் விஷம் குடித்துவிட்டு 15ம் தேதி காலை தனது அம்மா தனலட்சுமியிடம் கூறியுள்ளார்.