ஜெயங்கொண்டம், மார்ச் 18: ஆண்டிமடம் பகுதியில் முக கவசம் அணியாமல் வந்த வாகன ஓட்டிகளுக்கு வருவாய்த்துறை சார்பில் அபராதம் விதிக்கப்பட்டது. ஆண்டிமடம் வட்டத்தில் கொரோனா நோய் தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகாக முக கவசம் அணியாமல் இருசக்கர வாகனத்தில் சென்ற 10 பேருக்கு தலா ரூ.200 வீதம் அபராதம் விதிக்கப்பட்டு அவர்களுக்கு தலா 2 முக கவசங்கள் வழங்கப்பட்டது. மேலும் அனைத்து மக்களும் முக கவசங்கள் கட்டாயம் அணிய வேண்டும். சமூக இடைவெளியை பின்பற்ற வேண்டும் எனவும் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.