வாலிபருக்கு குண்டாஸ்

சிவகங்கை, ஜூலை 31: திருப்புவனம் அருகே பல்வேறு வழக்குகளில் தொடர்புடைய நபர் மீது குண்டர் தடுப்புச்சட்டம் பாய்ந்தது. பி.வேலாங்குளம் கிராமத்தை சேர்ந்த முத்துப்பாண்டி மகள் ஆசைமுத்து(24). இவர் மீது திருப்பாச்சேத்தி போலீஸ் ஸ்டேசனில் பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளன. மதுரை மத்திய சிறையில் இருக்கும் இவரை குண்டர் தடுப்புச்சட்டத்தில் கைது செய்ய சிவகங்கை மாவட்ட எஸ்பி டோங்கரேபிரவீன்உமேஷ், கலெக்டர் ஆஷாஅஜித்துக்கு பரிந்துரை செய்தார். கலெக்டர் உத்தரவிட்டதையடுத்து குண்டர் தடுப்பு சட்டத்தில், ஆசைமுத்துவை திருப்பாச்சேத்தி போலீசார் கைது செய்தனர்.

The post வாலிபருக்கு குண்டாஸ் appeared first on Dinakaran.

Related Stories: