வடமதுரை அருகே கடன் சுமையால் டிரைவர் தற்கொலை

வடமதுரை, ஆக. 22: வடமதுரை அருகே கடன் சுமையால் ஏற்பட்ட மனஉளைச்சலில் டிரைவர் தற்கொலை செய்து கொண்டார். வடமதுரை அருகேயுள்ள போஜனம்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் நவநீதகிருஷ்ணன் (39). டிராக்டர் டிரைவர். இவர் கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்னர் புதிதாக வீடு ஒன்றை கட்டினார். வீடு கட்டுவதற்காக நவநீதகிருஷ்ணன் ஒரு சிலரிடம் கடன் வாங்கியதாக கூறப்படுகிறது.

பின்னர் கடனை திருப்பி செலுத்த முடியாமல் மனஉளைச்சலில் இருந்த நவநீதகிருஷ்ணன் கடந்த ஆக.14ம் தேதி, வீட்டில் எலி மருந்தை குடித்து தற்கொலைக்கு முயன்றார். உடனே குடும்பத்தினர் அவரை மீட்டு சிகிச்சைக்காக திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். பின்னர் அவர், மேல் சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு நவநீதகிருஷ்ணன் சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் உயிரிழந்தார். இதுகுறித்து வடமதுரை எஸ்ஐ அங்கமுத்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார். இறந்த நவநீதகிருஷ்ணனுக்கு சிவகாமி என்ற மனைவியும், ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர்.

The post வடமதுரை அருகே கடன் சுமையால் டிரைவர் தற்கொலை appeared first on Dinakaran.

Related Stories: