லாட்டரி சீட்டு விற்றவர் கைது

 

சென்னிமலை, ஜூலை 1:சென்னிமலையில் உள்ள காமாட்சி அம்மன் கோவில் வீதியை சேர்ந்தவர் ரஞ்சித் (23). இவர் சென்னிமலை அறச்சலூர் ரோட்டில் சென்று கொண்டிருந்த போது ஒருவர் ரஞ்சித்தை வழிமறித்து தமிழக அரசால் தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டுகள் தன்னிடம் இருப்பதாகவும், இதனை சுரேஷ் என்பவரிடம் வாங்கி வந்ததாகவும் இதனை வாங்கினால் பரிசு விழும் என தெரிவித்ததாக கூறப்படுகிறது. பின்னர் அந்த நபரிடம் ரஞ்சித், தன்னுடைய வீட்டுக்கு சென்று பணம் எடுத்து வருவதாக கூறிவிட்டு சென்று சென்னிமலை போலீஸ் ஸ்டேஷனில் புகார் செய்தார்.

எஸ்.ஐ. பிரியா மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று அங்கு விற்பனைக்காக லாட்டரி சீட்டுகளை வைத்திருந்த சென்னிமலை களத்துக்காட்டை சேர்ந்த அருணாச்சலம் (52) என்பவரை கைது செய்தனர். அதே போல சென்னிமலை – ஊத்துக்குளி ரோட்டில் எல்லக்காடு பகுதியில் உள்ள ஒரு ஓட்டல் கடையில் அரசு அனுமதியின்றி மதுபானம் அருந்த அனுமதிப்பதாக சென்னிமலை எஸ்ஐ கிருஷ்ணராஜூக்கு தகவல் கிடைத்தது. உடனடியாக அவர் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று கடை உரிமையாளர் நீலகண்ட மூர்த்தி (42) என்பவரை கைது செய்தார்.

The post லாட்டரி சீட்டு விற்றவர் கைது appeared first on Dinakaran.

Related Stories:

சூலூரில் கலைஞரின் வரும் முன் காப்போம் மருத்துவ முகாம் வால்பாறை, ஜூன் 23: கோடை சீசன் முடிந்தும் வால்பாறைக்கு சுற்றுலா பயணிகளின் வரத்து அதிகளவில் காணப்பட்டது. தேயிலை தோட்டங்களில் நின்று ஆர்வமுடன் போட்டோ எடுத்து மகிழ்ந்தனர். வால்பாறையில் நேற்று சுற்றுலா பயணிகள் வரத்து அதிகரித்து காணப்பட்டது. வால்பாறை பகுதியில் நிலவும் குளு குளு காலநிலை சுற்றுலா பயணிகளை மகிழ்ச்சி அடைய செய்துள்ளது. மேலும், மழை, வெயில், மூடு பனி என ஒவ்வொரு பகுதியிலும் விதவிதமான கால நிலை நிலவுவதால் சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி அடைந்தனர். இந்நிலையில், வாட்டர் பால்ஸ் பகுதியில் சாரல் மழை மற்றும் வெயில் நீடிக்கிறது. கவர்கல் பகுதியில் மூடுபனி நிலவியது. வால்பாறை பகுதியில் லேசான சாரல் மழை மற்றும் மேக மூட்டம் நீடித்தது. 3 வகை கால நிலை ஒரு பகுதியில் நிலவுவதால் சுற்றுலா பயணிகள் குதூகலம் அடைந்தனர். மேலும், யானைகள், வரையாடுகள், காட்டு பன்றிகள், மான்கள் என சாலையோரம் வலம் வரும் வன விலங்குகள், புதிய நீர்வீழ்ச்சிகள் சுற்றுலா பயணிகளை உற்சாகப்படுத்தியது. வால்பாறை பூங்கா, படகு இல்லம், கூழாங்கல் ஆறு உள்ளிட்ட பகுதிகளில் சுற்றுலா பயணிகள் கூட்டம் அதிகளவில் காணப்பட்டது. வால்பாறையின் முக்கிய சுற்றுலா தலமான நல்லமுடி பூஞ்சோலை பகுதியில் குவிந்த சுற்றுலா பயணிகளால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதனால், சாலையின் இருபக்கமும் வாகனங்கள் வரிசையாக நின்றது. காவல்துறை மற்றும் வனத்துறையினர் விரைந்து சென்று போக்குவரத்தை சரி செய்தனர். வால்பாறையில் சுற்றுலா பனிகள் கூட்டம் அதிகரித்துள்ளதால் வியாபாரிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.