முசிறியில் வங்கி அதிகாரி வீட்டில் பூட்டை உடைத்து திருட்டு

 

முசிறி, டிச.9: முசிறியில் வங்கி அதிகாரி வீட்டின் பூட்டை உடைத்து பணம், வெள்ளிப்பொருட்களை மர்ம நபர்கள் திருடிச் சென்றனர். திருச்சி மாவட்டம், முசிறியில் தா.பேட்டை ரோட்டில் வசித்து வருபவர் விக்னேஷ். இவர் விழுப்புரத்தில் தனியார் வங்கி ஒன்றில் உதவி மேலாளராக பணிபுரிந்து வருகிறார். இந்நிலையில் கடந்த 20ஆம் தேதி இவரது வீட்டை பூட்டி விட்டு வெளியூருக்கு சென்றுள்ளார். நேற்று காலை வீட்டுக்கு வந்து பார்த்தபோது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டிருந்து.

இதனால் அதிர்ச்சி அடைந்த விக்னேஷ் வீட்டின் உள்ளே சென்று பார்த்தபோது பீரோ உடைக்கப்பட்டு 5 ஆயிரம் பணம், வெள்ளிப் பொருட்கள் ஆகியவை மர்ம நபர்களால் திருடி செல்லப்பட்டிருந்தது. இதுகுறித்து விக்னேஷ் முசிறி காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு விசாரணை மேற்கொண்டு உள்ளனர். முசிறியில் வீட்டின் பூட்டை உடைத்து நடைபெற்ற திருட்டு சம்பவத்தால் அப்பகுதி மக்கள் அச்சமடைந்துள்ளனர்.

The post முசிறியில் வங்கி அதிகாரி வீட்டில் பூட்டை உடைத்து திருட்டு appeared first on Dinakaran.

Related Stories: