மாற்றுத்திறன் மாணவ, மாணவிகள் கல்வித்தொகை பெற வாய்ப்பு

 

ஈரோடு, ஜூலை 21: மாற்றுத்திறன் கொண்ட மாணவ, மாணவிகள் கல்வித்தொகை பெற இ-சேவை மையம் மூலமாக விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து, ஈரோடு கலெக்டர் ராஜகோபால் சுன்கரா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: ஈரோடு மாவட்டத்தில் 2023-2024ம் நிதியாண்டுக்கு மாற்றுத்திறனாளிகள் நலத்துறையால் வழங்கப்படும் கல்வி உதவித்தொகை இருமடங்காக உயர்த்தப்பட்டுள்ளது. எனவே கல்வி உதவித்தொகை பெறத் தகுதியுடைய மாற்றுத்திறன் கொண்ட மாணவ, மாணவிகள் இ-சேவை மையம் மூலம் விண்ணப்பித்து பயன் பெறலாம்.இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

The post மாற்றுத்திறன் மாணவ, மாணவிகள் கல்வித்தொகை பெற வாய்ப்பு appeared first on Dinakaran.

Related Stories: