மாநில அளவிலான சைக்கிளிங் போட்டி

 

கோவை, ஆக. 15: தமிழ்நாடு சைக்கிளிங் சங்கம் சார்பாக மாநில அளவிலான எம்.டி.பி சைக்கிளிங் சாம்பியன்ஷிப் போட்டி கோவைப்புதூரில் உள்ள வெஸ்டர்ன் வேலி எம்.டி.பி டிராக்கில் நடந்தது. பல்வேறு பிரிவுகளில் நடைபெற்ற இப்போட்டிகளில் தமிழகத்தில் உள்ள பல்வேறு மாவட்டங்களில் இருந்து வீரர் மற்றும் வீராங்கனைகள் பங்கேற்றனர். இதில் 10 வயது பிரிவினருக்கான போட்டியில் ஷிபின் முதலிடம் பெற்றார். கார்ஷின் இரண்டாமிடமும், வருண் மூன்றாமிடமும் பெற்றார். 12 வயது பிரிவில் சச்சின் முதலிடமும், சுகேஷ் இரண்டாம் இடமும், கிஷோர் மூன்றாம் இடமும் பிடித்தனர்.

14 வயது பிரிவில் பிரனேஷ் முதலிடமும், நந்த கிஷோர் இரண்டாமிடமும், நரேன் மூன்றாமிடமும் பிடித்தனர். 16 வயது பிரிவில் ரமணி முதலிடமும், ஆதில் இரண்டாமிடமும், தீக்சித் மூன்றாம் இடமும் பிடித்தனர். 18 வயது பிரிவில் ஹர்சித் முதலிடமும், ஆலன் ரோவன் இரண்டாம் இடமும், விக்னேஷ்வர் மூன்றாம் இடமும் பிடித்தனர். எலைட் ஆண்கள் பிரிவில் அஷ்வின் குமார் முதலிடமும், அபிஜித் இரண்டாமிடமும், ஜெனிஸ் மூன்றாம் இடமும் பிடித்தனர். இந்த போட்டியில் முதல் மூன்று இடங்களில் பிடித்தவர்கள் தேசிய அளவிலான சைக்கிளிங் போட்டிக்கு தகுதி பெற்றனர்.

The post மாநில அளவிலான சைக்கிளிங் போட்டி appeared first on Dinakaran.

Related Stories:

சூலூரில் கலைஞரின் வரும் முன் காப்போம் மருத்துவ முகாம் வால்பாறை, ஜூன் 23: கோடை சீசன் முடிந்தும் வால்பாறைக்கு சுற்றுலா பயணிகளின் வரத்து அதிகளவில் காணப்பட்டது. தேயிலை தோட்டங்களில் நின்று ஆர்வமுடன் போட்டோ எடுத்து மகிழ்ந்தனர். வால்பாறையில் நேற்று சுற்றுலா பயணிகள் வரத்து அதிகரித்து காணப்பட்டது. வால்பாறை பகுதியில் நிலவும் குளு குளு காலநிலை சுற்றுலா பயணிகளை மகிழ்ச்சி அடைய செய்துள்ளது. மேலும், மழை, வெயில், மூடு பனி என ஒவ்வொரு பகுதியிலும் விதவிதமான கால நிலை நிலவுவதால் சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி அடைந்தனர். இந்நிலையில், வாட்டர் பால்ஸ் பகுதியில் சாரல் மழை மற்றும் வெயில் நீடிக்கிறது. கவர்கல் பகுதியில் மூடுபனி நிலவியது. வால்பாறை பகுதியில் லேசான சாரல் மழை மற்றும் மேக மூட்டம் நீடித்தது. 3 வகை கால நிலை ஒரு பகுதியில் நிலவுவதால் சுற்றுலா பயணிகள் குதூகலம் அடைந்தனர். மேலும், யானைகள், வரையாடுகள், காட்டு பன்றிகள், மான்கள் என சாலையோரம் வலம் வரும் வன விலங்குகள், புதிய நீர்வீழ்ச்சிகள் சுற்றுலா பயணிகளை உற்சாகப்படுத்தியது. வால்பாறை பூங்கா, படகு இல்லம், கூழாங்கல் ஆறு உள்ளிட்ட பகுதிகளில் சுற்றுலா பயணிகள் கூட்டம் அதிகளவில் காணப்பட்டது. வால்பாறையின் முக்கிய சுற்றுலா தலமான நல்லமுடி பூஞ்சோலை பகுதியில் குவிந்த சுற்றுலா பயணிகளால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதனால், சாலையின் இருபக்கமும் வாகனங்கள் வரிசையாக நின்றது. காவல்துறை மற்றும் வனத்துறையினர் விரைந்து சென்று போக்குவரத்தை சரி செய்தனர். வால்பாறையில் சுற்றுலா பனிகள் கூட்டம் அதிகரித்துள்ளதால் வியாபாரிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.