மாநில அளவிலான சைக்கிளிங் போட்டி

 

கோவை, ஆக. 15: தமிழ்நாடு சைக்கிளிங் சங்கம் சார்பாக மாநில அளவிலான எம்.டி.பி சைக்கிளிங் சாம்பியன்ஷிப் போட்டி கோவைப்புதூரில் உள்ள வெஸ்டர்ன் வேலி எம்.டி.பி டிராக்கில் நடந்தது. பல்வேறு பிரிவுகளில் நடைபெற்ற இப்போட்டிகளில் தமிழகத்தில் உள்ள பல்வேறு மாவட்டங்களில் இருந்து வீரர் மற்றும் வீராங்கனைகள் பங்கேற்றனர். இதில் 10 வயது பிரிவினருக்கான போட்டியில் ஷிபின் முதலிடம் பெற்றார். கார்ஷின் இரண்டாமிடமும், வருண் மூன்றாமிடமும் பெற்றார். 12 வயது பிரிவில் சச்சின் முதலிடமும், சுகேஷ் இரண்டாம் இடமும், கிஷோர் மூன்றாம் இடமும் பிடித்தனர்.

14 வயது பிரிவில் பிரனேஷ் முதலிடமும், நந்த கிஷோர் இரண்டாமிடமும், நரேன் மூன்றாமிடமும் பிடித்தனர். 16 வயது பிரிவில் ரமணி முதலிடமும், ஆதில் இரண்டாமிடமும், தீக்சித் மூன்றாம் இடமும் பிடித்தனர். 18 வயது பிரிவில் ஹர்சித் முதலிடமும், ஆலன் ரோவன் இரண்டாம் இடமும், விக்னேஷ்வர் மூன்றாம் இடமும் பிடித்தனர். எலைட் ஆண்கள் பிரிவில் அஷ்வின் குமார் முதலிடமும், அபிஜித் இரண்டாமிடமும், ஜெனிஸ் மூன்றாம் இடமும் பிடித்தனர். இந்த போட்டியில் முதல் மூன்று இடங்களில் பிடித்தவர்கள் தேசிய அளவிலான சைக்கிளிங் போட்டிக்கு தகுதி பெற்றனர்.

The post மாநில அளவிலான சைக்கிளிங் போட்டி appeared first on Dinakaran.

Related Stories: