மனித சங்கிலி போராட்டம்

மதுரை, டிச. 28: தமிழ்நாடு தொழில்துறை மின் நுகர்வோர் கூட்டமைப்பு சார்பில் மின் கட்டணத்தை திரும்ப பெற வலியுறுத்தி மனிதச் சங்கிலிப் போராட்டம் மதுரை தெற்குவாசல் முதல் கிரைம் பிராஞ்ச் வரை நேற்று நடைபெற்றது. இந்த மனிதச் சங்கிலி போராட்டத்தில் மடீட்சியா தலைவர் லட்சுமிநாராயணன், சேம்பர் ஆப் காமர்ஸ் துணைத்தலைவர் செல்வம் உள்பட பல்வேறு தொழில் நிறுவன உரிமையாளர்கள் மற்றும் தொழிலாளர்கள் என 45 இணைப்பு சங்கங்களைச் சேர்ந்த ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். போராட்டத்தை ஒருங்கிணைப்பாளர்கள் ரகுநாதராஜா, பொன்குமார் உள்ளிட்டோர் ஒருங்கிணைத்தனர்.

The post மனித சங்கிலி போராட்டம் appeared first on Dinakaran.

Related Stories: