டெங்கு விழிப்புணர்வு உறுதிமொழி ஏற்பு

மல்லசமுத்திரம், ஜூலை 2: மல்லசமுத்திரம் அரசுப்பள்ளி மாணவர்களிடையே டெங்கு, மலேரியா ஒழிப்பு குறித்த விழிப்புணர்வு உறுதிமொழி எடுக்கப்பட்டது. மல்லசமுத்திரம் ஆரம்ப சுகாதார நிலையம் சார்பில் நேற்று, மல்லசமுத்திரம் அரசினர் ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில், மாணவர்களிடையே டெங்கு மற்றும் மலேரியா ஒழிப்பு குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு உறுதிமொழி ஏற்கப்பட்டது. வட்டார மருத்து அலுவலர் ஜெகதீஷ் தலைமையில் சுகாதார ஆய்வாளர்கள் முருகேசன், பிரகாஷ், மகேந்திரன், தலைமை ஆசிரியர் மாணிக்கம், ஆசிரியர்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

The post டெங்கு விழிப்புணர்வு உறுதிமொழி ஏற்பு appeared first on Dinakaran.

Related Stories: