வக்கீல்கள் ஆர்ப்பாட்டம்

ராசிபுரம், ஜூலை 2: ராசிபுரம் தாலுகா சார்பு நீதிமன்றம், கிரிமினல் குற்றவியல் நீதிமன்றம், சிவில் நீதிமன்ற வழக்கறிஞர் சங்கத்தினர், ஒன்றிய அரசின் புதிய சட்டத்தை எதிர்த்து, நேற்று ராசிபுரத்தில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டத்தில், புதிய குற்றவியல் சட்டங்களை அமல்படுத்தும் முடிவை நிறுத்தி வைத்து, திரும்பப்பெற வலியுறுத்தி கோஷமிட்டனர். ஆர்ப்பாட்டத்தில் தமிழ்நாடு, பாண்டிச்சேரி வழக்கறிஞர் சங்க பொதுச்செயலாளர் காமராஜ், ராசிபுரம் குற்றவியல் வழக்கறிஞர் சங்க தலைவர் வாசுதேவன் மற்றும் வழக்கறிஞர்கள் பலர் கலந்து கொண்டு கோஷங்கள் எழுப்பினர்.

The post வக்கீல்கள் ஆர்ப்பாட்டம் appeared first on Dinakaran.

Related Stories: