மதுக்கரை பகுதியில் நெரிசல்மிக்க வாக்குச்சாவடிகளை எஸ்பி ஆய்வு

மதுக்கரை, மார்ச் 31: மதுக்கரை பகுதியில் உள்ள நெரிசல் மிகுந்த வாக்குச்சாவடிகளை கோவை மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் பத்ரிநாராயணன் பார்வையிட்டு ஆய்வு செய்தார். பொள்ளாச்சி நாடாளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட கிருஸ்ணா கல்லூரி, மல்லையன் மெட்ரிகுலேஷன் பள்ளி, மதுக்கரை மார்க்கெட் பகுதியில் உள்ள துவக்கப்பள்ளி மற்றும் மேல்நிலைப்பள்ளிகளில் உள்ள பகுதிகளில் மக்கள் தொகை அதிகமாக இருப்பதால் மேற்கண்ட வாக்குச்சாவடி மையங்களில் வாக்குப்பதிவின் போது கூட்ட நெரிசல் அதிகமாக இருக்கும். இதுபோன்ற கூட்ட நெரிசல் அதிகமுள்ள வாக்குச்சாவடிகளை கோவை மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் பத்ரி நாராயணன் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்து வருகிறார். இந்நிலையில் நேற்று மதுக்கரை பகுதிக்கு வந்த எஸ்.பி.பத்ரிநாராயணன் மேற்கண்ட இடங்களில் உள்ள வாக்குச்சாவடி மையங்களுக்கு சென்று, அங்குள்ள வசதிகள் குறித்து ஆய்வு செய்தார். அப்போது இன்னும் என்னென்ன தேவைகள் உள்ளது என்பதையும் கேட்டறிந்தார்.

The post மதுக்கரை பகுதியில் நெரிசல்மிக்க வாக்குச்சாவடிகளை எஸ்பி ஆய்வு appeared first on Dinakaran.

Related Stories:

சூலூரில் கலைஞரின் வரும் முன் காப்போம் மருத்துவ முகாம் வால்பாறை, ஜூன் 23: கோடை சீசன் முடிந்தும் வால்பாறைக்கு சுற்றுலா பயணிகளின் வரத்து அதிகளவில் காணப்பட்டது. தேயிலை தோட்டங்களில் நின்று ஆர்வமுடன் போட்டோ எடுத்து மகிழ்ந்தனர். வால்பாறையில் நேற்று சுற்றுலா பயணிகள் வரத்து அதிகரித்து காணப்பட்டது. வால்பாறை பகுதியில் நிலவும் குளு குளு காலநிலை சுற்றுலா பயணிகளை மகிழ்ச்சி அடைய செய்துள்ளது. மேலும், மழை, வெயில், மூடு பனி என ஒவ்வொரு பகுதியிலும் விதவிதமான கால நிலை நிலவுவதால் சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி அடைந்தனர். இந்நிலையில், வாட்டர் பால்ஸ் பகுதியில் சாரல் மழை மற்றும் வெயில் நீடிக்கிறது. கவர்கல் பகுதியில் மூடுபனி நிலவியது. வால்பாறை பகுதியில் லேசான சாரல் மழை மற்றும் மேக மூட்டம் நீடித்தது. 3 வகை கால நிலை ஒரு பகுதியில் நிலவுவதால் சுற்றுலா பயணிகள் குதூகலம் அடைந்தனர். மேலும், யானைகள், வரையாடுகள், காட்டு பன்றிகள், மான்கள் என சாலையோரம் வலம் வரும் வன விலங்குகள், புதிய நீர்வீழ்ச்சிகள் சுற்றுலா பயணிகளை உற்சாகப்படுத்தியது. வால்பாறை பூங்கா, படகு இல்லம், கூழாங்கல் ஆறு உள்ளிட்ட பகுதிகளில் சுற்றுலா பயணிகள் கூட்டம் அதிகளவில் காணப்பட்டது. வால்பாறையின் முக்கிய சுற்றுலா தலமான நல்லமுடி பூஞ்சோலை பகுதியில் குவிந்த சுற்றுலா பயணிகளால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதனால், சாலையின் இருபக்கமும் வாகனங்கள் வரிசையாக நின்றது. காவல்துறை மற்றும் வனத்துறையினர் விரைந்து சென்று போக்குவரத்தை சரி செய்தனர். வால்பாறையில் சுற்றுலா பனிகள் கூட்டம் அதிகரித்துள்ளதால் வியாபாரிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.