மதுக்கரை, சுகுணாபுரம் பகுதியில் நாளை மின் தடை

 

கோவை, செப். 4: கோவை குனியமுத்தூர் மின் பகிர்மான வட்ட செயற்பொறியாளர் அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது: குனியமுத்தூர் கோட்டத்திற்குட்பட்ட மதுக்கரை துணை மின் நிலையத்தில் நாளை (வியாழக்கிழமை) மின் பராபரிப்பு பணிகள் நடைபெறுகிறது.

இதன் காரணமாக காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை, கேஜி சாவடி, பாலத்துறை, பைபாஸ் ரோடு, சாவடி புதூர், காளியாபுரம், எட்டிமடை, எம்ஜிஆர் நகர், சுகுணாபுரம், பிகே புதூர், மதுக்கரை, அறிவொளி நகர், கோவைப்புதூர் ஒரு பகுதி ஆகிய இடங்களில் மின் விநியோகம் தடை செய்யப்படுகிறது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

The post மதுக்கரை, சுகுணாபுரம் பகுதியில் நாளை மின் தடை appeared first on Dinakaran.

Related Stories: