பெரியார் படத்திற்கு மலர் தூவி மரியாதை

கோவை, செப். 18: கோவை மாநகர் மாவட்ட மதிமுக சார்பில் பெரியார் 146வது பிறந்தநாள் விழா அதன் அலுவலகத்தில் நேற்று நடந்தது. மாநகர் மாவட்ட மதிமுக செயலாளர் கணபதி செல்வராஜ் தலைமையில் நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் பெரியார் உருவ படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினர். அரசியல் ஆலோசனை குழு உறுப்பினர் அ.சேதுபதி முன்னிலை வகித்தார். மாநில அவைத்தலைவர் ஆடிட்டர் அர்ஜுனராஜ் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். மதிமுக உயர்நிலை குழு உறுப்பினர் ஆர்.ஆர்.மோகன்குமார் இனிப்பு வழங்கினார்.

நிகழ்ச்சியில், மாநகர் மாவட்ட துணை செயலாளர் பயனீர் தியாகு, பகுதிக்கழக செயலாளர்கள் அன்பு என்கிற தர்மராஜ், எல்.லூயிஸ், கே.பழனிச்சாமி, வெ.சு.சம்பத், ச.பா.விஸ்வராஜ், சி.மணிக்குமார், தலைமை செயற்குழு உறுப்பினர் கு.விஜயகுமார், மாநகராட்சி கவுன்சிலர் சித்ரா வெள்ளியங்கிரி, மாநில பொதுக்குழு உறுப்பினர்கள் மார்க்கெட் எம்.செல்வம். வி.கே.எம்.ஷாஜகான், பொறியாளர் அணி அமைப்பாளர் ராஜன், வார்டு செயலாளர்கள் கங்கா குப்புசாமி, எல்.ஜி.பி.முருகேசன், சின்ன முருகேசன், ராஜா சக்கரவர்த்தி, மைக்செட் ராஜன், சக்திவேல் உள்பட பலர் பங்கேற்றனர்.

The post பெரியார் படத்திற்கு மலர் தூவி மரியாதை appeared first on Dinakaran.

Related Stories: