மசாஜ் சென்டரில் விபசாரம்: பெண் கைது

 

கோவை, ஆக. 15: கோவையில் சில மசாஜ் சென்டர்களில் இளம்பெண்களை வைத்து விபசாரம் நடத்தி வருகின்றனர். இதில் கேரளா, ஆந்திரா, மும்பையில் இருந்து பெண்களை வரவழைத்து மாத சம்பவம் வழங்கி விபசாரத்தில் ஈடுபடுத்துகின்றனர். கோவை கணபதி பகுதியை சேர்ந்த 24 வயது வாலிபர் செல்வபுரம் பேரூர் மெயின் ரோட்டில் உள்ள மசாஜ் சென்டருக்கு சென்றார். அப்போது அங்கிருந்த பெண் ஒருவர் நீங்கள் மசாஜ் செய்த பின் கூடுதலாக பணம் கொடுத்தால் பெண்களுடன் உல்லாசமாக இருக்கலாம் என அழைப்பு விடுத்தனர்.

இதற்கு மறுப்பு தெரிவித்த அந்த வாலிபர் அங்கிருந்து செல்வபுரம் போலீசுக்கு புகார் அளித்தார். புகாரின் பேரில், போலீசார் அங்கே சென்று சோதனை நடத்தினர். அதில், மசாஜ் என்ற பெயரில் விபசார தொழில் நடைபெற்றது தெரியவந்தது. இதனைத்தொடர்ந்து போலீசார் மசாஜ் சென்டரில் விபசாரம் நடத்திய கணபதி லே அவுட்டை சேர்ந்த மகேந்திரன் என்பவர் மனைவி சுபாஷினி (30) என்பவரை கைது செய்தனர். பின்னர் அவரை கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

The post மசாஜ் சென்டரில் விபசாரம்: பெண் கைது appeared first on Dinakaran.

Related Stories:

சூலூரில் கலைஞரின் வரும் முன் காப்போம் மருத்துவ முகாம் வால்பாறை, ஜூன் 23: கோடை சீசன் முடிந்தும் வால்பாறைக்கு சுற்றுலா பயணிகளின் வரத்து அதிகளவில் காணப்பட்டது. தேயிலை தோட்டங்களில் நின்று ஆர்வமுடன் போட்டோ எடுத்து மகிழ்ந்தனர். வால்பாறையில் நேற்று சுற்றுலா பயணிகள் வரத்து அதிகரித்து காணப்பட்டது. வால்பாறை பகுதியில் நிலவும் குளு குளு காலநிலை சுற்றுலா பயணிகளை மகிழ்ச்சி அடைய செய்துள்ளது. மேலும், மழை, வெயில், மூடு பனி என ஒவ்வொரு பகுதியிலும் விதவிதமான கால நிலை நிலவுவதால் சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி அடைந்தனர். இந்நிலையில், வாட்டர் பால்ஸ் பகுதியில் சாரல் மழை மற்றும் வெயில் நீடிக்கிறது. கவர்கல் பகுதியில் மூடுபனி நிலவியது. வால்பாறை பகுதியில் லேசான சாரல் மழை மற்றும் மேக மூட்டம் நீடித்தது. 3 வகை கால நிலை ஒரு பகுதியில் நிலவுவதால் சுற்றுலா பயணிகள் குதூகலம் அடைந்தனர். மேலும், யானைகள், வரையாடுகள், காட்டு பன்றிகள், மான்கள் என சாலையோரம் வலம் வரும் வன விலங்குகள், புதிய நீர்வீழ்ச்சிகள் சுற்றுலா பயணிகளை உற்சாகப்படுத்தியது. வால்பாறை பூங்கா, படகு இல்லம், கூழாங்கல் ஆறு உள்ளிட்ட பகுதிகளில் சுற்றுலா பயணிகள் கூட்டம் அதிகளவில் காணப்பட்டது. வால்பாறையின் முக்கிய சுற்றுலா தலமான நல்லமுடி பூஞ்சோலை பகுதியில் குவிந்த சுற்றுலா பயணிகளால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதனால், சாலையின் இருபக்கமும் வாகனங்கள் வரிசையாக நின்றது. காவல்துறை மற்றும் வனத்துறையினர் விரைந்து சென்று போக்குவரத்தை சரி செய்தனர். வால்பாறையில் சுற்றுலா பனிகள் கூட்டம் அதிகரித்துள்ளதால் வியாபாரிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.