போதைப்பொருள் விற்ற வாலிபர் கைது

 

பாலக்காடு, ஆக. 14: பால க்காடு மாவட்டத்தில், கோங்காடு பஸ் ஸ்டாண்டில் கோங்காடு போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது சந்தேகப்படும்படியாக நின்ற வாலிபரிடம் போலீசார் விசாரணை செய்ததில் அவர் முன்னுக்குப் பின் முரணாக பதிலளித்துள்ளார். மேலும், சந்தேகமடைந்த போலீசார் தீவிர விசாரணை செய்ததில் திருச்சூர் மாவட்டம் திருவில்லாமலை பகுதியை சேர்ந்த ராகவன் மகன் ராகுல் (24) என்பதும், இவரிடம் 2.60 கிராம் போதைப்பொருள் வைத்திருந்ததும், விற்பனைக்காக வந்ததும் தெரியவந்தது. இதையடுத்து போலீசார் வாலிபரை கைது செய்து போதைப்பொருளை பறிமுதல் செய்தனர்.

The post போதைப்பொருள் விற்ற வாலிபர் கைது appeared first on Dinakaran.

Related Stories: