விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம் 19ம் தேதி ஊட்டியில் நடக்கிறது

 

ஊட்டி, ஜூலை 3: விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம் வரும் 19ம் தேதி ஊட்டியில் நடக்கிறது. நீலகிரி மாவட்ட கலெக்டர் அருணா கூறியிருப்பதாவது: நீலகரி மாவட்டத்தில் விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் வரும் 19ம் தேதி காலை 11 மணிக்கு ஊட்டி பிங்கர்போஸ்ட் பகுதியில் உள்ள மாவட்ட கலெக்டர் கூடுதல் அலுவலக கூட்டரங்கில் நடக்கவுள்ளது.

எனவே, விவசாயிகள் விவசாயம் சம்பந்தப்பட்ட கோரிக்கைகள் ஏதேனும் இருப்பின், அந்த கோரிக்கைகளை வரும் 8ம் தேதிக்குள் தோட்டக்கலைத்துறை இணை இயக்குநர், தபால் பெட்டி எண் 72, ஊட்டி 643001 என்ற அலுவலக முகவரிக்கு தபால் மூலமாகவே அல்லது நேரடியாக வழங்கலாம்.

மேலும், jdhooty@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு மின்னஞ்சல் மூலமாகவோ அனுப்பி வைக்கலாம். மாவட்ட கலெக்டர் மற்றும் மாவட்டத்தில் உள்ள அனைத்துதுறை அலுவலர்களும் கலந்து கொள்வதால், விவசாயிகள் விவசாயம் சம்பந்தமான குறைகள் இருப்பின் இக்கூட்டத்தில் நேரில் தெரிவித்து, விவரம் பெற்று கொள்ளலாம். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

 

The post விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம் 19ம் தேதி ஊட்டியில் நடக்கிறது appeared first on Dinakaran.

Related Stories: