திருவாரூர் பொதுமக்கள், வாகன ஓட்டிகள் மகிழ்ச்சி திருத்துறைப்பூண்டி காய்கறி மார்க்கெட் தூய்மை பணி

திருத்துறைப்பூண்டி, ஏப். 6: திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி காய்கறி மார்க்கெட் தூய்மை பணியை நகராட்சி தலைவர் கவிதாபாண்டியன் பார்வையிட்டார். திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி நகராட்சி சார்பில் திருத்துறைப்பூண்டி நகராட்சியில் 24 வார்டுகள் உள்ளது. வார்டுகளில் நடைபெறும் வளர்ச்சி பணிகள், தூய்மை பணி போன்றவற்றை நகர்மன்ற தலைவர் கவிதா பாண்டியன் தினமும் ஒவ்வொரு வார்டுகளாக பார்வையிட்டு ஆய்வு செய்து வருகிறார். நேற்று பழைய பேருந்து நிலையம் பகுதியில் உள்ள காய்கறி மார்க்கெட் தூய்மை பணியை நகர்மன்ற தலைவர் கவிதா பாண்டியன் பார்வையிட்டார். இதில் சுகாதார மேற்பார்வையாளர் வீரையன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

The post திருவாரூர் பொதுமக்கள், வாகன ஓட்டிகள் மகிழ்ச்சி திருத்துறைப்பூண்டி காய்கறி மார்க்கெட் தூய்மை பணி appeared first on Dinakaran.

Related Stories: