திருக்கழுக்குன்றத்தில் கவுன்சிலர்கள் கூட்டம்

திருக்கழுக்குன்றம்: திருக்கழுக்குன்றம் பேரூராட்சி அலுவலகத்தில் கவுன்சிலர்கள் கூட்டம் நேற்று நடந்தது. இதில், பேரூராட்சி மன்ற தலைவர் ஜி.டி.யுவராஜ் தலைமை தாங்கினார். துணை தலைவர் வீ.அருள்மணி, பேரூராட்சி செயல் அலுவலர் ஜெயக்குமார் முன்னிலை வகித்தனர்.கூட்டத்தின்போது, பேரூராட்சிக்குட்பட்ட 18 வார்டுகளிலும் மேற்கொள்ள வேண்டிய திட்டப்பணிகள் குறித்து ஆலோசிக்கப்பட்டது.வார்டுகளில் கால்வாய், சிமெண்ட் சாலை, பைப்லைன், திருக்கழுக்குன்றம் பஸ் நிலையம் பின்புறம் எரிவாய் தகனமேடை அமைப்பது உள்ளிட்ட பல்வேறு   பணிகள்  குறித்து தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன….

The post திருக்கழுக்குன்றத்தில் கவுன்சிலர்கள் கூட்டம் appeared first on Dinakaran.

Related Stories: