தமிழகத்தில் புதிதாக 805 பேருக்கு கொரோனா

சென்னை: தமிழகத்தில் புதிதாக 805 பேருக்கு கொரோனா ெதாற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 12 பேர் மரணம் அடைந்துள்ளனர். தமிழகத்தில் நேற்று மட்டும் 64,364 சோதனைகள் செய்யப்பட்டுள்ளது. இதில் 805 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தற்போது வரை லண்டனில் இருந்தவர்கள் மற்றும் தொடர்பில் இருந்த 44 பேருக்கு கொரோனா ெதாற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இவர்களில் 4 பேருக்கு உருமாறிய கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதை சேர்த்து தமிழகத்தில் 8,23,986 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. நேற்று மட்டும் 911 பேர் குணமடைந்து உள்ளனர். தற்போது வரை 8,04,239 பேர் குணமடைந்துள்ளனர். 7,547 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். நேற்று 12 பேர் இறந்தனர்….

The post தமிழகத்தில் புதிதாக 805 பேருக்கு கொரோனா appeared first on Dinakaran.

Related Stories: