சென்னை: ஆதிதிராவிடர் கல்வி கட்டணத்தை முழுமையாக தமிழக அரசு ஏற்கும் என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார். சென்னை ராயப்பேட்டையில் உள்ள ஒய்.எம்.சி.ஏ மைதானத்தில் புரட்சி பாரதம் கட்சியின் 40வது ஆண்டு விழா நடைபெற்றது, இதில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி மற்றும் துணைமுதல்வர் ஓ.பன்னீர்செல்வம், அமைச்சர் பெஞ்சமின் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். முதல்வர் எடப்பாடி பழனிசாமி பேசியதாவது:காவிரி விவகாரத்தில் உச்ச நீதிமன்றம் நல்ல தீர்ப்பை கொடுக்கும் என்ற நம்பிக்கை உள்ளது. ஆதிதிராவிடர் மக்களுக்கு கல்விக்கட்டனத்தை முழுமையாக அரசு வழங்கும். ஒரு சில காரணத்தால் ஆதிதிராவிடர் மக்களுக்கு வழங்கி வந்த கல்வி கட்டணம் தடைப்பட்டு இருந்தது, இனி ஆதிதிராவிடர் மக்களுக்கு கல்விக்கட்டனத்தை முழுமையாக தமிழக அரசு வழங்கும்.