ஓடும் பேருந்தில் நடத்துனர் பலி

தண்டையார்பேட்டை: சென்னை ஆயிரம் விளக்கு பகுதியைச் சேர்ந்தவர் பூவலிங்கம் (54). இவர் மாநகர போக்குவரத்து கழக பேருந்து நடத்துனராக பணிபுரிந்து வந்தார். இந்நிலையில், நேற்றுமுன்தினம் இரவு 10 மணியளவில் பிராட்வேயில் இருந்து கோவளம் செல்லும் மாநகர பேருந்தில் பணியில் இருந்தார். பிராட்வே பேருந்து நிலையத்திலிருந்து புறப்பட்டு குறளகம் அருகே பேருந்து சென்று கொண்டிருந்தது. அப்போது, நடத்துனர் பூவலிங்கம் திடீரென மயங்கி விழுந்தார். இதை பார்த்த பயணிகள் கூச்சலிட்டதும் ஓட்டுநர் ஜஸ்டின் சேவியர், பேருந்தை நேரடியாக ராஜிவ் காந்தி அரசு மருத்துவமனைக்கு ஓட்டிச்சென்றார். அங்கு பரிசோதித்த மருத்துவர்கள் வரும் வழியிலேயே பூவலிங்கம் இறந்து விட்டதாக தெரிவித்தனர். இந்த சம்பவம் தொடர்பாக எஸ்பிளனேடு போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். ஓடும் பேருந்தில் நடத்துனர் மயங்கி விழுந்து உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

The post ஓடும் பேருந்தில் நடத்துனர் பலி appeared first on Dinakaran.

Related Stories: