குப்பையில் கிடந்த துப்பாக்கி

சென்னை: கூடுவாஞ்சேரி அடுத்த ஆதனூர் ஊராட்சிக்கு உட்பட்ட கொருக்கந்தாங்கல் பகுதியில் ஒருவரது வீட்டின் அருகே உள்ள குப்பையில் கை துப்பாக்கி கிடப்பதாக மணிமங்கலம் போலீசாருக்கு நேற்று அப்பகுதி பொதுமக்கள் தகவல் கொடுத்தனர். அதன்பேரில், போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று, குப்பையில் கேட்பாரற்று கிடந்த கை துப்பாக்கியை கைப்பற்றினர்.

அங்கு பாய், தலையணை மற்றும் சோபா செட் ஆகியவை சிதறிக் கிடந்தன. ஆதனூர் ஊராட்சியில் வட மாநில வாலிபர்கள், ரவுடி கும்பல் மற்றும் கஞ்சா கும்பல் மர்மமான முறையில் வீடு வாடகைக்கு எடுத்து தங்கி வருவதாக கூறப்படுகிறது. இந்நிலையில், குப்பையில் துப்பாக்கியை வீசி சென்றது யார் என போலீசார் விசாரித்து வருகின்றனர்.

The post குப்பையில் கிடந்த துப்பாக்கி appeared first on Dinakaran.

Related Stories: