சென்னை மாநகரில் 120 இன்ஸ்பெக்டர்கள் பணியிட மாற்றம்: கமிஷனர் சந்தீப் ராய் ரத்தோர் உத்தரவு


சென்னை: சென்னையில் 120 இன்ஸ்பெக்டர்களை பணியிட மாற்றம் செய்து போலீஸ் கமிஷனர் சந்தீப் ராய் ரத்தோர் உத்தரவிட்டுள்ளார்.  இதுகுறித்து அவர் வெளியிட்ட உத்தரவில்: அடையார் சட்டம் ஒழுங்கு இன்ஸ்பெக்டர் மகேஷ்குமார் விபச்சார தடுப்பு பிரிவு IIக்கும், புளியந்தோப்பு குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டர் வெங்கடேசன் பட்டினப்பாக்கம் குற்றப்பிரிவுக்கும், பரங்கிமலை போக்குவரத்து புலனாய்வு பிரிவில் இருந்த பழனி அசோக்நகர் சட்டம் ஒழுங்கிற்கும்,

அண்ணாநகர் போக்குவரத்து புலனாய்வு பிரிவு ராஜலட்சுமி விபச்சார தடுப்பு பிரிவு-Iக்கும், நத்தம்பாக்கம் குற்றப்பிரிவில் இருந்த பிரகாஷ் திருவல்லிக்கேணி சட்டம் ஒழுங்கிற்கும், நுண்ணறிவு பிரிவில் இருந்த மோகன்ராஜ் எழும்பூர் சட்டம் ஒழுங்கிற்கும், மத்திய குற்றப்பிரிவில் இருந்த வீராசாமி மெரினா சட்டம் ஒழுங்கிற்கும், திருவல்லிக்கேணி சட்டம் ஒழுங்கில் இருந்த அறிவழகன் ஜாம்பஜார் சட்டம் ஒழுங்கிற்கும், மத்திய குற்றப்பிரிவில் இருந்த தினேஷ் குமார் ராயப்பேட்டை சட்டம் ஒழுங்கிற்கும் மாற்றப்பட்டுள்ளனர்.

மேலும் காத்திருப்போர் பட்டியில் இருந்த சேட்டு சைதாப்பேட்டை சட்ட ஒழுங்கிற்கும், காத்திருப்போர் பட்டியில் இருந்த ராமசுந்தரம் கோட்டூர்புரம் சட்டம் ஒழுங்கிற்கும், காத்திருப்போர் பட்டியில் இருந்த ரமணி குமரன் நகர் சட்டம் ஒழுங்கிற்கும், எழும்பூர் சட்டம் ஒழுங்கில் இருந்த திருமால் பெரியமேடு சட்டம் ஒழுங்கிற்கும், மீனாம்பாக்கம் குற்றப்பிரிவில் இருந்த ஸ்டாலின் மாம்பலம் குற்றப்பிரிவுக்கும், சாஸ்திரி நகர் சட்டம் ஒழுங்கில் இருந்த தங்கராஜ் வேளச்சேரி குற்றப்பிரிவுக்கும், ஜாம்பஜார் குற்றப்பிரிவில் இருந்த மினூர்சாமி மயிலாப்பூர் குற்றப்பிரிவுக்கும், அண்ணா-எம்ஜிஆர் நினைவிடத்தில் இருந்த ஹரிகிருஷ்ணன் ஆயிரம் விளக்கு சட்டம் ஒழுங்கிற்கும்,

நீலாங்கரை சட்டம் ஒழுங்கில் இருந்த ஆனந்த் பாபு நுங்கம்பாக்கம் சட்டம் ஒழுங்கிற்கும், காத்திருப்போர் பட்டியலில் இருந்த மோகன்தாஸ் அண்ணாசாலை சட்டம் ஒழுங்கிற்கும், துரைப்பாக்கம் குற்றப்பிரிவில் இருந்த ராஜாராம் வேப்பேரி சட்டம் ஒழுங்கிற்கும், சைதாப்பேட்டை சட்டம் ஒழுங்கு இன்ஸ்பெக்டர் விஷ்வநாதன் நீலாங்கரை சட்டம் ஒழுங்கிற்கும் மாற்றம் செய்யப்பட்டனர். மேலும் வேப்பேரி சட்டம் ஒழுங்கு பிரிவு உட்பட மொத்தம் 120 இன்ஸ்பெக்டர்கள் பணியிட மாற்றம் செய்து போலீஸ் கமிஷனர் சந்தீப் ராய் ரத்தோர் உத்தரவிட்டுள்ளார்.

The post சென்னை மாநகரில் 120 இன்ஸ்பெக்டர்கள் பணியிட மாற்றம்: கமிஷனர் சந்தீப் ராய் ரத்தோர் உத்தரவு appeared first on Dinakaran.

Related Stories: