ஈஸ்டர் பண்டிகையை முன்னிட்டு மாநகராட்சி முதியோர் இல்லத்தில் மதிய உணவு வினியோகம்

பெ.நா.பாளையம். ஏப்.10: கோவை கே.என்.ஜி.புதூர் மற்றும் பூசாரிபாளையத்தில் மாநகராட்சி சார்பில் ஆதரவற்றோர் முதியோர் இல்லம் செயல்பட்டு வருகிறது. இங்கு வயதானஆண்கள் மற்றும் பெண்கள் சுமார் நூறு பேர் தங்க வைக்கப்பட்டு மாநகராட்சி சார்பில் பராமரிக்கப்பட்டு வருகின்றனர். அரசு சார்பில் உணவு வழங்கப்பட்டாலும் விசேஷ நாட்களில் சில தனியார் அமைப்புகள், தொண்டு நிறுவனங்கள் உணவு கொடுக்கின்றனர். நேற்று ஈஸ்டர் பண்டிகையை முன்னிட்டு துடியலூரில் உள்ள கிரேஸ் ஏ ஜி ஆலயத்தின் சார்பில் சமூக சேவை மையத்தின் ஒருங்கிணைப்பாளர் சார்லஸ் தலைமையில் கே.என்.ஜி புதூர் மற்றும் பூசாரிபாளையத்தில் உள்ள இல்லத்திற்கு இனிப்பு மற்றும் மதிய உணவு வழங்கப்பட்டது.

The post ஈஸ்டர் பண்டிகையை முன்னிட்டு மாநகராட்சி முதியோர் இல்லத்தில் மதிய உணவு வினியோகம் appeared first on Dinakaran.

Related Stories:

சூலூரில் கலைஞரின் வரும் முன் காப்போம் மருத்துவ முகாம் வால்பாறை, ஜூன் 23: கோடை சீசன் முடிந்தும் வால்பாறைக்கு சுற்றுலா பயணிகளின் வரத்து அதிகளவில் காணப்பட்டது. தேயிலை தோட்டங்களில் நின்று ஆர்வமுடன் போட்டோ எடுத்து மகிழ்ந்தனர். வால்பாறையில் நேற்று சுற்றுலா பயணிகள் வரத்து அதிகரித்து காணப்பட்டது. வால்பாறை பகுதியில் நிலவும் குளு குளு காலநிலை சுற்றுலா பயணிகளை மகிழ்ச்சி அடைய செய்துள்ளது. மேலும், மழை, வெயில், மூடு பனி என ஒவ்வொரு பகுதியிலும் விதவிதமான கால நிலை நிலவுவதால் சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி அடைந்தனர். இந்நிலையில், வாட்டர் பால்ஸ் பகுதியில் சாரல் மழை மற்றும் வெயில் நீடிக்கிறது. கவர்கல் பகுதியில் மூடுபனி நிலவியது. வால்பாறை பகுதியில் லேசான சாரல் மழை மற்றும் மேக மூட்டம் நீடித்தது. 3 வகை கால நிலை ஒரு பகுதியில் நிலவுவதால் சுற்றுலா பயணிகள் குதூகலம் அடைந்தனர். மேலும், யானைகள், வரையாடுகள், காட்டு பன்றிகள், மான்கள் என சாலையோரம் வலம் வரும் வன விலங்குகள், புதிய நீர்வீழ்ச்சிகள் சுற்றுலா பயணிகளை உற்சாகப்படுத்தியது. வால்பாறை பூங்கா, படகு இல்லம், கூழாங்கல் ஆறு உள்ளிட்ட பகுதிகளில் சுற்றுலா பயணிகள் கூட்டம் அதிகளவில் காணப்பட்டது. வால்பாறையின் முக்கிய சுற்றுலா தலமான நல்லமுடி பூஞ்சோலை பகுதியில் குவிந்த சுற்றுலா பயணிகளால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதனால், சாலையின் இருபக்கமும் வாகனங்கள் வரிசையாக நின்றது. காவல்துறை மற்றும் வனத்துறையினர் விரைந்து சென்று போக்குவரத்தை சரி செய்தனர். வால்பாறையில் சுற்றுலா பனிகள் கூட்டம் அதிகரித்துள்ளதால் வியாபாரிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.