ஆர்ப்பாட்டம்

ஒட்டன்சத்திரம், ஜூலை 11: ஒட்டன்சத்திரத்தில் தமிழ் புலிகள் கட்சியின் சார்பில் நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மாவட்ட செயலாளர் தர்மராஜ் தலைமை வகித்தார். ஆர்ப்பாட்டத்தில் சாதி ஆணவ படுகொலையை தடுக்க தனிச்சட்டம் இயற்ற கோரியும், நெல்லை கம்யூனிஸ்ட் ஆபீஸ் தாக்கப்பட்டது, கோவிலாங்குளம் சம்பவம் கண்டித்தும் கோஷங்கள் எழுப்பபட்டன. இதில் மாவட்ட துணை செயலாளர் அன்புபுலி, மாவட்ட தொழிலாளர் அணி செயலாளர் சுரேஷ்குமார், தொகுதி செயலாளர் லட்சுமணன்,இளம்புலிகள் அணி மாவட்ட செயலாளர் இரணியன் உள்பட பலர் கலந்து கொண்டனர். நகர செயலாளர் விடுதலை குமார் நன்றி கூறினார்.

The post ஆர்ப்பாட்டம் appeared first on Dinakaran.

Related Stories: