ஆட்டோ டிரைவர் உட்பட 2 பேர் கைது

கோவை, ஏப். 6: கோவை குனியமுத்தூர் காந்தி நகரை சேர்ந்தவர் சுலைமான் (57), கட்டிட ஒப்பந்ததாரர். இவர் குனியமுத்தூர் ஹசன் கார்டனில் புதிதாக கட்டுமான பணியை மேற்கொண்டு வருகிறார். கட்டிட பணிக்காக சென்ட்ரிங் சீட்டுகள் அடுக்கி வைக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், நேற்று முன்தினம் ஆட்டோவில் வந்த 2 பேர் அங்கிருந்த சென்ட்ரிங் சீட்டுகளை திருடி ஆட்டோவில் ஏற்றி கொண்டிருந்தனர். இதைப்பார்த்த அக்கம்பக்கத்தினர் இருவரையும் பிடித்து கட்டிட ஒப்பந்ததாரர் சுலைமானுக்கு தகவல் கொடுத்தனர். இது தொடர்பாக குனியமுத்தூர் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் விசாரணையில், இரும்பு சென்ட்ரிங் சீட்டுகளை திருடியது குனியமுத்தூர் குறிஞ்சி கார்டனை சேர்ந்த பெயிண்டர் முகமது ஆசிக் (24), உக்கடம் ஜி.எம். நகரை சேர்ந்த ஆட்டோ டிரைவர் சனூப் (25) என தெரியவந்தது. போலீசார் 2 பேரையும் கைது செய்தனர்.

The post ஆட்டோ டிரைவர் உட்பட 2 பேர் கைது appeared first on Dinakaran.

Related Stories:

சூலூரில் கலைஞரின் வரும் முன் காப்போம் மருத்துவ முகாம் வால்பாறை, ஜூன் 23: கோடை சீசன் முடிந்தும் வால்பாறைக்கு சுற்றுலா பயணிகளின் வரத்து அதிகளவில் காணப்பட்டது. தேயிலை தோட்டங்களில் நின்று ஆர்வமுடன் போட்டோ எடுத்து மகிழ்ந்தனர். வால்பாறையில் நேற்று சுற்றுலா பயணிகள் வரத்து அதிகரித்து காணப்பட்டது. வால்பாறை பகுதியில் நிலவும் குளு குளு காலநிலை சுற்றுலா பயணிகளை மகிழ்ச்சி அடைய செய்துள்ளது. மேலும், மழை, வெயில், மூடு பனி என ஒவ்வொரு பகுதியிலும் விதவிதமான கால நிலை நிலவுவதால் சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி அடைந்தனர். இந்நிலையில், வாட்டர் பால்ஸ் பகுதியில் சாரல் மழை மற்றும் வெயில் நீடிக்கிறது. கவர்கல் பகுதியில் மூடுபனி நிலவியது. வால்பாறை பகுதியில் லேசான சாரல் மழை மற்றும் மேக மூட்டம் நீடித்தது. 3 வகை கால நிலை ஒரு பகுதியில் நிலவுவதால் சுற்றுலா பயணிகள் குதூகலம் அடைந்தனர். மேலும், யானைகள், வரையாடுகள், காட்டு பன்றிகள், மான்கள் என சாலையோரம் வலம் வரும் வன விலங்குகள், புதிய நீர்வீழ்ச்சிகள் சுற்றுலா பயணிகளை உற்சாகப்படுத்தியது. வால்பாறை பூங்கா, படகு இல்லம், கூழாங்கல் ஆறு உள்ளிட்ட பகுதிகளில் சுற்றுலா பயணிகள் கூட்டம் அதிகளவில் காணப்பட்டது. வால்பாறையின் முக்கிய சுற்றுலா தலமான நல்லமுடி பூஞ்சோலை பகுதியில் குவிந்த சுற்றுலா பயணிகளால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதனால், சாலையின் இருபக்கமும் வாகனங்கள் வரிசையாக நின்றது. காவல்துறை மற்றும் வனத்துறையினர் விரைந்து சென்று போக்குவரத்தை சரி செய்தனர். வால்பாறையில் சுற்றுலா பனிகள் கூட்டம் அதிகரித்துள்ளதால் வியாபாரிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.