ஐடிஐ படிப்பில் சேருவதற்கான கால அவகாசம் வரும் 30ம் தேதி வரை நீட்டிக்கப்படுவதாக அறிவிப்பு!

சென்னை: ஐடிஐ படிப்பில் சேருவதற்கான கால அவகாசம் வரும் 30ம் தேதி வரை நீட்டிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஐடிஐ நேரடி சேர்க்கைக்கான கால அவகாசம் 13ம் தேதி முடிந்த நிலையில் வரும் 30வரை நீட்டிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதே போல் தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலை. இளநிலை படிப்புகளுக்கு விண்ணப்பிக்க ஜூன் 23 வரை அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது. நாளையும் விண்ணப்பிக்க அவகாசம் முடியும் நிலையில் ஜூன் 23ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

Related Stories: