சென்னை: கடந்த 2000 முதல் 2002ம் ஆண்டு வரை உதவி பொறியாளர்கள் ஆக பணியில் சேர்ந்த தகுதியுடைய 379 பொறியாளர்களில் முதற்கட்டமாக 300 உதவி செயற்பொறியாளர்களுக்கு பதவி உயர்வு ஆணைகளை மின்சாரத்துறை அமைச்சர் நிர்மல் குமார் நேற்று வழங்கினார். இந்த பதவி உயர்வுகள் அனைத்தும் மூப்புப் பட்டியல், தகுதி மற்றும் வாரிய விதிமுறைகளின் அடிப்படையில் வழங்கப்பட்டுள்ளன. அரசின் பணியாளர் நலன் சார்ந்த அணுகுமுறையின் தொடர்ச்சியாக மேற்கொள்ளப்பட்டுள்ள இந்த நடவடிக்கைக்கு மின்வாரிய பொறியாளர்கள் மற்றும் பணியாளர்கள் தங்களது மகிழ்ச்சியையும் நன்றியையும் தெரிவித்துள்ளனர்.
