சென்னை: கோவில்களில் சிறப்புக் கட்டண தரிசனம் முறையை ரத்து செய்யக் கோரிய வழக்கில் அரசு பதிலளிக்க உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கோவில்களில் சிறப்புக் கட்டண தரிசன முறையை ரத்து செய்ய அறநிலைத்துறைக்கு உத்தரவிட வேண்டும் என்று மனுவில் கோரிக்கை விடுக்கப்பட்டிருந்து. விஸ்வ இந்து பரிஷத் நிர்வாகி தொடர்ந்த இந்த வழக்கை மே 29ம் தேதி ஒத்திவைத்துள்ளது சென்னை உயர்நீதிமன்றம்.
