சிபிஎஸ்இ பிளஸ்2 தேர்வில் அதிக மதிப்பெண்கள் பெற்று ஆர்எம் ஜெயின் வித்யாஷ்ரம் மேல்நிலைப்பள்ளி சாதனை

 

 

திருவள்ளூர், மே 14: திருவள்ளூர்  ஆர்எம் ஜெயின் வித்யாஷ்ரம் மேல்நிலைப்பள்ளி மாணவர்கள், சிபிஎஸ்இ பிளஸ்2 தேர்வில் அதிக மதிப்பெண்கள் பெற்று சாதனை படைத்துள்ளனர். இதில் மாணவன் ரா.ரகுநாத், 500க்கு 476 மதிப்பெண்கள் பெற்று பள்ளி அளவில் முதலிடம் பிடித்து சாதனை படைத்துள்ளார். இவர் கணிதம் – 99, கணினி அறிவியல் – 98 மதிப்பெண்கள் பெற்றுள்ளார்.
இதேபோல் மாணவி கி.திரித்தி, 500க்கு 471 மதிப்பெண்கள் பெற்று பள்ளி அளவில் இரண்டாம் இடம் பிடித்துள்ளார். இவர் பொருளாதாரம் – 98, மார்க்கெட்டிங் – 95 மதிப்பெண்கள் பெற்றுள்ளார். மேலும், மாணவன் அ.பாவிக், 500க்கு 469 மதிப்பெண்கள் பெற்று பள்ளி அளவில் மூன்றாம் இடம் பிடித்து சாதனை படைத்துள்ளார். இவர், பிசினஸ் ஸ்டடிஸ் – 98 மதிப்பெண்கள் பிடித்துள்ளனர்.
இவ்வாறு, தேர்வில் சாதனை படைத்த மாணவர்களையும், இதற்கு காரணமான ஆசிரியர்களையும்,  ஆர்எம் ஜெயின் பள்ளிக் குழும இயக்குநர் கிஷோர் குமார், அறங்காவலர் பீகம் சந்த் ஜெயின், கல்வி ஒருங்கிணைப்பாளர் அஜித் பிரசாத் ஜெயின், பள்ளியின் முதல்வர் வி.எஸ்.ரேகா, துணை முதல்வர்கள் லக்ஷ்மி வரதன், மேரி ஆகியோர் பாராட்டி வாழ்த்து தெரிவித்தனர்.

Related Stories: