வாக்காளர் பட்டியலைப் பொறுத்தவரை தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ்குமார் ஒரு பேரழிவு ஆயுதம்: காங்.கடும் விமர்சனம்

 

புதுடெல்லி: வாக்காளர் பட்டியலைப் பொறுத்தவரை தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ்குமார் ஒரு முழுமையான பேரழிவு ஆயுதம் என்று காங்கிரஸ் விமர்சித்துள்ளது. காங்கிரஸ் பொதுச்செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் டெல்லியில் நேற்று செய்தியாளர்களிடம் பேசுகையில்,” தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ்குமார் மீதான கடுமையான விமர்சனம் இந்திய தனித்துவ அடையாள ஆணையத்தின் முதல் தலைமை இயக்குனராக பணியாற்றிய மூத்த ஐஏஎஸ் அதிகாரியான ராம் சேவக் சர்மாவிடம் இருந்து வந்துள்ளது. ஒட்டுமொத்த வாக்காளர் பட்டியல் சரிபார்ப்பு நடவடிக்கையும் எவ்வளவு சேதத்தையும் பேரழிவையும் ஏற்படுத்தியுள்ளது என்பதை விவரிக்கும் கட்டுரையை அவர் எழுதி இருக்கிறார்.

இது காங்கிரஸ் கட்சியோ, திரிணாமுல் காங்கிரஸ் கட்சியோ மட்டும் சொல்லும் கருத்து இல்லை. அதுமட்டுமின்றி ஓய்வுபெற்ற தேர்தல் ஆணையர்களும் வெளிப்படையாகவே கருத்து தெரிவித்துள்ளனர். தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ்குமார் உள்துறை அமைச்சர் என்ன சொல்கிறாரோ அதைத்தான் செயல்படுத்திக்கொண்டு இருக்கிறார். வாக்காளர் பட்டியலைப் பொறுத்தவரை தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ்குமார் ஒரு முழுமையான பேரழிவு ஆயுதம். பதவியில் இருந்து அவரை நீக்குவதற்கு எதிர்க்கட்சிகள் வலியுறுத்தும்” என்றார்.

Related Stories: