உயர்கல்வி மசோதா, அதிகாரங்களை ஒரே ஆணையத்திடம் குவிக்க வழிவகுக்கும்: நாடாளுமன்ற குழு அச்சம்

 

புதுடெல்லி: விக்சித் பாரத் சிக்ஷா அதிக்‌ஷான் என்னும் உயர் கல்வி மசோதா கடந்த ஆண்டு மக்களவையில் அறிமுகப்படுத்தப்பட்டது. அதை தொடர்ந்து அது நாடாளுமன்ற கூட்டு குழுவுக்கு அனுப்பப்பட்டது. பல்கலைகழக மானிய குழு(யுஜிசி) அகில இந்திய தொழில்நுட்ப கவுன்சில், தேசிய ஆசிரியர் கவுன்சில் ஆகியவற்றை கலைத்து ஒரே ஒருங்கிணைந்த ஒழுங்குமுறை ஆணையத்தை உருவாக்குவதன் மூலம் இந்தியாவின் உயர்கல்வித் துறையில் ஒரு பெரும் சீரமைப்புக்கு மசோதா முன்மொழிந்துள்ளது.

நாடாளுமன்ற கூட்டு குழுவின் வரைவு அறிக்கை அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் அனுப்பப்பட்டுள்ளது. அதில் விரிவான ஒழுங்குமுறை அதிகாரங்களை ஒரே மத்திய ஒழுங்குமுறை அமைப்பிடம் குவிப்பது, அதிகாரத்துவ அல்லது சித்தாந்த வரம்பு மீறலுக்கு வழிவகுத்து, அதன்மூலம் தற்போதுள்ள யுஜிசி கட்டமைப்பின் கீழ் கிடைக்கும் நிறுவன சுயாட்சியைப் பாதிக்கக்கூடும் என்று குழு அச்சம் தெரிவித்துள்ளது.

Related Stories: