வயநாடு நிலச்சரிவில் அன்புக்குரியவர்களை இழந்த குடும்பங்களுக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி இரங்கல்..!!

சென்னை: நிலச்சரிவில் அன்புக்குரியவர்களை இழந்த குடும்பங்களுக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி இரங்கல் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் தனது எக்ஸ் தளத்தில் கூறியதாவது; கேரள மாநிலம் வயநாட்டில் உள்ள மேப்பாடி அருகே மிகப்பெரிய நிலச்சரிவுகளில் விலைமதிப்பற்ற உயிர்கள் பரிதாபகரமாக இழந்தது ஆழ்ந்த வருத்தம் அளிக்கிறது. தங்கள் அன்புக்குரியவர்களை இழந்த குடும்பங்களுக்கு எனது நெஞ்சார்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன். காணாமல் போனவர்கள் பாதுகாப்பாக கிடைக்கவும் காயமடைந்தவர்கள் விரைவில் குணமடையவும் வேண்டிக் கொள்கிறேன். இவ்வாறு ஆளுநர் ரவி பதிவிட்டுள்ளார்.

 

The post வயநாடு நிலச்சரிவில் அன்புக்குரியவர்களை இழந்த குடும்பங்களுக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி இரங்கல்..!! appeared first on Dinakaran.

Related Stories: