இதனால் பயனாளர்கள் தங்கள் சொந்த நாட்டிற்கு சென்று அங்குள்ள அமெரிக்க தூதரகத்தில் மீண்டும் வேலை நீடிப்பு உள்ளிட்ட ஆவணங்களை சமர்ப்பித்து விசாவை புதுப்பித்து அதன் பிறகே மீண்டும் அமெரிக்காவிற்குள் நுழைய முடிந்தது. இதுகுறித்து அமெரிக்காவிலுள்ள பல்லாயிரக்கணக்கான இந்தியர்கள் முறையிட்டு வந்தனர். அமெரிக்காவில் மோடி சுற்றுப்பயணம் மேற்கொண்டு வரும் நிலையில், விசா புதுப்பிக்கும் முறை மாற்றப்படும் என்று அறிவிக்ப்பட்டுள்ளது. இதன்படி, இனி இந்தியர்களும், மற்ற வெளிநாட்டவர்களும் அமெரிக்காவிற்குள்ளேயே தங்கள் விசாவை புதுப்பித்துக் கொள்ளலாம். எச்1 பி விசாவுடன் 6 ஆண்டுகளுக்கு மேல் அமெரிக்காவில் பணியாற்றினால் அவர்களால் நிரந்தர அமெரிக்க குடியுரிமை பெறுவதற்கான கிரீன் கார்டு பெற விண்ணப்பிக்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.
The post எச் 1 பி விசாக்களை புதுப்பிக்க இனி சொந்த நாட்டிற்கு செல்ல வேண்டாம்..அமெரிக்க அரசின் புதிய நடைமுறைக்கு வெளிநாட்டினர் வரவேற்பு!! appeared first on Dinakaran.