எம்பிபிஎஸ்., பிடிஎஸ் போன்ற இளநிலை மருத்துவ படிப்புகளில் சேருவதற்கு நீட் நுழைவுத் தேர்வு வருடம் தோறும் நடத்தப்பட்டு வருகிறது. இந்த ஆண்டுக்கான நீட் நுழைவுத்தேர்வு நாடு முழுவதும் தொடங்கி முடிவடைந்தது. இன்று பிற்பகல் 2 மணிக்கு தொடங்கிய நீட் தேர்வு மாலை 5.20க்கு நிறைவடைந்தது.
2024-25ம் ஆண்டிற்கான இடைநிலை மருத்துவப் படிப்புக்கான நீட் தேர்வு நாடு முழுவதும் 24 லட்சம் மாணவர்கள் 557 நகரங்களில் நீட் தேர்வு எழுதினர். தமிழ், ஆங்கிலம், இந்தி, மலையாளம் உட்பட 13 மொழிகளில் நீட் தேர்வு நடைபெற்று முடிவடைந்தது. ஜூன் 14ஆம் தேதி முடிவு வெளியாகிறது.
நீட் நுழைவுத் தேர்வில் NCERT பாடப் புத்தகங்களில் இருந்தே அதிக கேள்விகள் கேட்கப்பட்டிருந்தன எனவும், நீட் தேர்வு வினாத்தாள் எதிர்பார்த்த அளவுக்கு எளிதாக இல்லை எனவும் இயற்பியல் பாடக் கேள்விகள் கடினமாக இருந்ததாகவும் நீட் தேர்வு எழுதிய பெரும்பாலான மாணவ, மாணவிகள் தெரிவித்தனர்.
The post 2024-25ஆம் கல்வி ஆண்டின் இளநிலை மருத்துவ படிப்புக்கு நடைபெற்ற நீட் நுழைவுத் தேர்வு நிறைவு appeared first on Dinakaran.