இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, மனுதாரர் அந்த பெண் பயணியிடம் டிக்கெட் கொடுத்த பிறகு அதற்காக ரூ.5 வாங்கியிருந்தால் அவரது பையில் கூடுதலாக ரூ.2 மட்டுமே இருந்திருக்க முடியும். 2 ரூபாய் கூடுதல் தொகையால் போக்குவரத்து கழகத்துக்கு இழப்பு ஏற்படப்போவதில்லை. இதுபோன்ற குற்றச்சாட்டுகளுக்காக மனுதாரரை பணி நீக்கம் செய்திருப்பது ஆச்சரியம். ஆனால், அவருக்கு வழங்கிய தண்டனை அதிகபட்சம் என்று கோர்ட் கருதுகிறது. இந்த சம்பவம் நீதிமன்றத்தின் மனச்சாட்சியை அசைத்துள்ளது. எனவே, இந்த வழக்கில் மனுதாரரை பணி நீக்கம் செய்த உத்தரவு ரத்து செய்யப்படுகிறது. அவரை பணியில் மீண்டும் சேர்க்க வேண்டும். அவருக்கு உரிய நிலுவை பணப்பலன்களை 6 வாரங்களுக்குள் தர வேண்டும்’’ என்றார்.
The post டிக்கெட் வசூலில் ரூ.7 அதிகமாக இருந்ததால் டிஸ்மிஸ் பஸ் கண்டக்டரை மீண்டும் பணியில் சேர்க்க வேண்டும்: போக்குவரத்து கழகத்துக்கு ஐகோர்ட் உத்தரவு appeared first on Dinakaran.