இதனை கண்டித்தும் உயர்கல்வித்துறை நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும் இந்திய மாணவர் சங்கதில் உறுப்பினர்களாக உள்ள மாணவர்கள் கடந்த இரண்டு நாட்களாக போராட்டம் நடத்தி வருகின்றனர். இது தொடர்பாக கல்லூரி நிர்வாகம் நேற்று நடத்திய பேச்சு வார்த்தை தோல்வியடைந்த நிலையில் இன்றும் கல்லூரிக்கு வந்த மாணவர்கள் வகுப்புகளை புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். தங்களது போராட்டத்தை முடிவுக்கு கொண்டுவர தமிழ்நாடு அரசு மற்றும் மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டுள்ள மாணவ சங்கத்தினர், இல்லாவிட்டால் மாவட்ட முழுவதும் உள்ள கல்லூரிகளில் போராட்டத்தை தீவிரப்படுத்துவோம் என்று எச்சரித்துள்ளனர்.
The post தூத்துக்குடி வ.உ.சி கல்லூரியில் 3-வது நாளாக எஸ்.எப்.ஐ மாணவர்கள் போராட்டம்: கூடுதல் கல்வி கட்டணம் வசூலிக்கப்படுவதற்கு எதிர்ப்பு appeared first on Dinakaran.