அந்த வகையில், இன்று (24.07.2023) சென்னை, திருவான்மியூர், மருந்தீஸ்வரர் கோயிலுக்கு சொந்தமான ரூ.2.50 கோடி மதிப்பீட்டிலான 4 கடைகள் மீட்கப்பட்டு கோயில் வசம் சுவாதீனம் பெறப்பட்டுள்ளது. சென்னை, திருவான்மியூர், மருந்தீஸ்வரர் கோயிலுக்கு சொந்தமான வணிக வளாக கட்டிடம் கிழக்கு கடற்கரை சாலையில் அமைந்துள்ளது.
இதில் வணிக பயன்பாட்டிற்கு விடப்பட்டிருந்தது. 4 கடைகளின் வாடகைதாரர்கள் நீண்ட காலமாக வாடகை செலுத்தாமலும், உள்வாடகைக்கும் விட்டிருந்தார்கள். வாடகைதாரர்கள் மீது சென்னை மண்டல இணை ஆணையர் நீதிமன்றத்தில் சட்டப்பிரிவு -78 -ன் படி வழக்கு தொடரப்பட்டு, அதன் உத்தரவுப்படி சென்னை மாவட்ட உதவி ஆணையர் எம்.பாஸ்கரன் முன்னிலையில் வருவாய் மற்றும் காவல்துறை உதவியுடன் மேற்குறிப்பிட்ட 4 கடைகளும் இன்று (24.07.2023) பூட்டி சீலிடப்பட்டு திருக்கோயில் வசம் சுவாதினம் பெறப்பட்டது.
இதன் தற்போதைய சந்தை மதிப்பு சுமார் ரூ.2.50 கோடியாகும். இந்நிகழ்வின்போது, திருக்கோயில் செயல் அலுவலர் ம.சக்திவேல், ஆய்வாளர் ராஜலெட்சுமி மற்றும் திருக்கோயில் பணியாளர்கள் உடனிருந்தனர்.
The post திருவான்மியூர் மருந்தீஸ்வரர் கோயிலுக்கு சொந்தமான ரூ.2.50 கோடி மதிப்பிலான கடைகள் மீட்பு appeared first on Dinakaran.